top of page

தட்கல் டிக்கெட் புக்கிங்: செகண்டுகளில் காலியாகும் டிக்கெட்டுகள்

  • Aug 13
  • 1 min read

இந்திய ரயில்வேயில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத் தீர்வது தொடர்ந்து வருகிறது. இதனால் அவசரப் பயணம் மேற்கொள்ளும் சாதாரண பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.


தட்கல் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், சட்டவிரோத இடைத்தரகர்கள் மற்றும் சில ரயில்வே ஊழியர்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதன்படி, 2023 முதல் 2026 ஜூன் வரை ரயில்வே முன்பதிவு முறையை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக டிக்கெட்டுகளை விற்றதாக நாடு முழுவதும் 13,580 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சட்டவிரோத நெட்வொர்க்கிற்கு உடந்தையாக இருந்ததாக 65 ரயில்வே ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேல்மண்டல ரயில்வே பகுதிகளில் மட்டும் 9 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீது ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 143 கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத இடைத்தரகர்கள் தட்கல் மற்றும் முன்பதிவு முறைகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க RPF சார்பில் வழக்கமான சோதனைகள் மற்றும் சிறப்பு தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதனால் தட்கல் டிக்கெட்டுகள் சாதாரண பயணிகளுக்கு கிடைக்காமல் போவதன் பின்னணியில் செயல்படும் சட்டவிரோத இடைத்தரகர் நெட்வொர்க் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது. ரயில்வே நிர்வாகமும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page